» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வியாழன் 20, பிப்ரவரி 2025 10:35:24 AM (IST)

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து திருக்கோயிலிலிருந்து கொடிப்பட்டம் புறப்பாடாகி, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
பின்னா் காப்பு கட்டிய ச.பாலசுப்பிரமணியன் வல்லவராயர், கொடிமரத்தில் திருவிழாக் கொடியை ஏற்றினாா். அதன் பின்னா் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் திருக்கோயில் உதவி ஆணையர் நாகவேல், மணியம் செந்தில்குமார், ஆறுமுகராஜ், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் அம்மன் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான வருகின்ற பிப்.29ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)










