» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மன்னராட்சிக்கு உதாரணம் திமுக: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!

வியாழன் 20, பிப்ரவரி 2025 10:14:56 AM (IST)



"மக்களாட்சிக்கு உதாரணம் அதிமுக.. மன்னராட்சிக்கு உதாரணம் திமுக" என விளாத்திகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளருமான கடம்பூர் ராஜூ தலைமை வகித்து கட்சியினருக்கு ஆலோசனை கூறினார். பூத் கமிட்டியில் கட்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், அஇஅதிமுகவில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் விளையாட்டு பிரிவுக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

மேலும், தமிழகத்தில் நிலவி வரும் மோசமான சட்டம் ஒழுங்கு பற்றியும், திமுக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரையும் விமர்சனம் செய்து மன்னராட்சிக்கு உதாரணம் திமுக என்றும், மக்களாட்சிக்கு உதாரணம் அதிமுக என்றும்" பேசினார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருமாள், சின்னப்பன், முன்னாள் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், அம்மா பேரவை செயலாளர் வரதராஜ பெருமாள், கலை இலக்கிய அணி அமைப்பாளர் போடு சாமி, நகரச் செயலாளர் மாரிமுத்து, அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன், மகளிர் அணி சாந்தி, வார்டு கவுன்சிலர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory