» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை ஷட்டருக்குள் சிக்கிய புறா பத்திரமாக மீட்பு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 10:42:56 AM (IST)

தூத்துக்குடியில் ஜவுளிக்கடை ஷட்டருக்குள் சிக்கிய புறாவை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி கீழ ரதி வீதியில் உள்ள ஜவுளி கடை மாடிகளில் ஏராளமான புறாக்கள் வசித்து வருகின்றன. இதில் ஒரு புறா இன்று காலை ஜவுளிக் கடையில் கதவு ஷட்டர்க்குள் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்து கடை ஊழியர்கள் புறாவை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் புறாவை வெளியே எடுக்க முடியவில்லை. இதை தொடர்ந்து தூத்துக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு துறை அதிகாரி இருதயராஜ் தலைமைலான தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஷட்டருக்குள் சிக்கிக்கொண்ட புறாவை கம்பி மூலம் எடுக்க முயன்றனர். ஆனால் புறா வராததால் ஷட்டரில் உள்ள பலகையை ரம்பத்தான் அறுத்து பலகையை உடைத்து புறாவை உயிருடன் மீட்டனர். அதன் பின்பு புறாவுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் முதல் உதவி சிகிச்சை மற்றும் உணவு அளித்து அதனை பறக்க விட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)











SRINIVASANFeb 7, 2025 - 10:55:32 AM | Posted IP 162.1*****