» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணம் இரட்டிப்பாக தருவதாக ரூ.2கோடி மோசடி: தந்தை-மகன் குண்டர் சட்டத்தில் கைது!

வியாழன் 6, பிப்ரவரி 2025 8:05:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விசேஷ பூஜை செய்து பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்த தந்தை மற்றும் மகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் விசேஷ பூஜை செய்து அதன் மூலம் பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி ரூபாய் 2 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டையபுரம் புங்கவர்த்தனம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (63) மற்றும் அவரது மகன் அய்யாதுரை (27) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இருவரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு-I போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!

வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory