» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீடுபுகுந்து தகராறு: 5பேர் கைது!

புதன் 12, ஜூன் 2024 10:50:52 AM (IST)

தூத்துக்குடியில் வீடுபுகுந்து தகராறு செய்து பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக 5பேரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் முனியசாமி (65). இவரது மனைவி வேலம்மாள் (49). இவர்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துகுமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. 

முத்துகுமார் மகன் மாடசாமி (26), அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் தங்கமுருகன் (27), குருநாதன் மகன் குமார் (28), புஷ்பராஜ் மகன் முத்துகுமார் (20), அந்தோனி மகன் ராஜா என்ற முனியசாமி ஆகிய 5பேரும் முனியசாமி வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சூறையாடி முனியசாமியை தாக்கினார்களாம். 

இதில் காயம் அடைந்த முனியசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி வேலம்மாள் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் (பொ) பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து 5பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory