» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வீடுபுகுந்து தகராறு: 5பேர் கைது!
புதன் 12, ஜூன் 2024 10:50:52 AM (IST)
தூத்துக்குடியில் வீடுபுகுந்து தகராறு செய்து பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக 5பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் முனியசாமி (65). இவரது மனைவி வேலம்மாள் (49). இவர்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துகுமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது.
முத்துகுமார் மகன் மாடசாமி (26), அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் தங்கமுருகன் (27), குருநாதன் மகன் குமார் (28), புஷ்பராஜ் மகன் முத்துகுமார் (20), அந்தோனி மகன் ராஜா என்ற முனியசாமி ஆகிய 5பேரும் முனியசாமி வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சூறையாடி முனியசாமியை தாக்கினார்களாம்.
இதில் காயம் அடைந்த முனியசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி வேலம்மாள் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் (பொ) பிரேம் ஆனந்த் வழக்குப் பதிந்து 5பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










