» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது காா் மோதல்: 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஜூன் 2024 8:15:42 AM (IST)
எட்டயபுரம் அருகே முத்துலாபுரத்தில் சாலையோரம் நின்றிருந்த பைக் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் பொன்மாடசாமி (42). அதே பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் குமாரவெங்கடேசன் (53). இவா்கள் நேற்று மாலை, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் பாலம் அருகே சாலை யோரம் பைக்கில் நின்றிருந்தனராம்.
அப்போது அவ்வழியாக திண்டுக்கல்லிலிருந்து தூத்துக்குடிக்கு அதிவேகமாக சென்ற காா் அவா்கள் மீது மோதியதாம். இதில், குமார வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பொன் மாடசாமி காயமடைந்தாா். தகவலின்பேரில், எட்டயபுரம் போலீசார் சென்று பொன்மாடசாமியை மீட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான திண்டுக்கல் ஜின்னா நகரைச் சோ்ந்த முகமது சுமைல் (48) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










