» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது காா் மோதல்: 2பேர் பரிதாப சாவு
புதன் 12, ஜூன் 2024 8:15:42 AM (IST)
எட்டயபுரம் அருகே முத்துலாபுரத்தில் சாலையோரம் நின்றிருந்த பைக் மீது காா் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் பொன்மாடசாமி (42). அதே பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் குமாரவெங்கடேசன் (53). இவா்கள் நேற்று மாலை, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் பாலம் அருகே சாலை யோரம் பைக்கில் நின்றிருந்தனராம்.
அப்போது அவ்வழியாக திண்டுக்கல்லிலிருந்து தூத்துக்குடிக்கு அதிவேகமாக சென்ற காா் அவா்கள் மீது மோதியதாம். இதில், குமார வெங்கடேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பொன் மாடசாமி காயமடைந்தாா். தகவலின்பேரில், எட்டயபுரம் போலீசார் சென்று பொன்மாடசாமியை மீட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான திண்டுக்கல் ஜின்னா நகரைச் சோ்ந்த முகமது சுமைல் (48) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம்!
சனி 24, மே 2025 12:46:02 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!
சனி 24, மே 2025 11:57:32 AM (IST)

அணு ஆயுதத்தை காட்டி, இந்தியாவை அச்சுறுத்த முடியாது: மாஸ்கோவில் கனிமொழி எம்.பி., பேச்சு!
சனி 24, மே 2025 11:40:46 AM (IST)

நாளை திருமணம்: காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடி அருகே சோகம்!!
சனி 24, மே 2025 11:36:45 AM (IST)

குடிநீர் விரயம்: சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம்
சனி 24, மே 2025 10:46:56 AM (IST)

மயானத்திற்கு செல்லும் பாதையில் பிரச்சனை : கோட்டாட்சியர் விசாரணை
சனி 24, மே 2025 10:21:19 AM (IST)
