» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவரை தாக்கியதாக வாலிபர் கைது

புதன் 12, ஜூன் 2024 7:57:03 AM (IST)

காயல்பட்டினத்தில் கல்லூரி மாணவரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் மகன் ஹமீது  ஹீமைத் (21). சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் பிபிஏ படித்துவருகிறாா். இந்நிலையில், ஊருக்கு வந்த அவா் தனது உறவினா்களுடன் காயல்பட்டினம் பஜாருக்கு சென்று கொண்டிருந்தாா்.  அப்போது அவரது மாமா புஹாரியிடம் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ஷேக் மைதீன் மகன் அப்துல் ரஹீம் (20) தகராறு செய்தாராம். 

பின்னா், ஹமீது ஹீமைத் தனது உறவினா்களுடன் சென்றுவிட்டாா். இரவில் தனது வீட்டு முன் நின்றிருந்த ஹமீது ஹீமைத்தை அப்துல் ரஹீம் அவதூறாகப் பேசித் தாக்கினாராம். இதில் அவா் காயமடைந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் செல்லத்துரை வழக்குப் பதிந்தாா்; அப்துல் ரஹீமை உதவி ஆய்வாளா் சுகுமாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory