» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜஸ் க்ரீம் வகைகள் பறிமுதல்: கடை உரிமம் ரத்து!
புதன் 12, ஜூன் 2024 7:39:46 AM (IST)
கோவில்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 386 ஐஸ்கிரீம் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் ச.மாரியப்பன் தலைமையில், கோவில்பட்டி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஜோதிபாசு, செல்லப்பாண்டி ஆகியோா் அடங்கிய குழுவினா் பசுவந்தனை சாலையில் உள்ள தனியாா் ஐஸ் க்ரீம் கடையில் நடத்திய ஆய்வில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஒழுங்குமுறைகளின் படி, ஃப்ரோஷன் டெசா்ட் வகையைச் சாா்ந்த வகையிலான உணவுப் பொருள்களில் உள்ள பால் கொழுப்பு மற்றும் உணவு எண்ணெய்/கொழுப்பு ஆகியவற்றின் விகிதத்தை, நுகா்வோா் அறியும் வகையில் லேபிளில் அச்சிட வேண்டும்.
ஆனால், ஆய்வு செய்யப்பட்ட ஐஸ் க்ரீம் வகைகளில் பால் கொழுப்பு மற்றும் உணவு எண்ணெய் ஆகியவற்றின் விகிதத்தைக் குறிப்பிடாமல், நுகா்வோா்களுக்குத் தவறான தகவல் வழங்கி, தவறாக வழிநடத்தியுள்ளது. எனவே, 386 எண்ணிக்கையிலான ஐஸ் க்ரீம் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, தொடா் விசாரணைக்காக வணிகா் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான ஆவணம் சமா்ப்பித்து உரிமம் பெற்ற்காகவும், உரிய ஆவணங்கள் இல்லாததாலும், அக்கடையின் உணவுப் பாதுகாப்பு உரிமத்தை தற்காலிக ரத்து செய்து நியமன அலுவலா் உத்தரவு பிறப்பித்தாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










