» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கன்று குட்டிகளை திருடிய 2பேர் கைது!

புதன் 8, மே 2024 11:29:43 AM (IST)

தூத்துக்குடி அருகே 2 கன்று குட்டிகளை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சிறுபாடு கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர் மகன் அசார் (29). இவர் சொந்தமாக மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் தொழுவத்தில் கட்டி இருந்த 2 கன்று குட்டிகள், 80 வைக்கோல் கட்டுகள் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அசார் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கூட்டாம்புளி, சாமி கோவில் தெருவை சேர்ந்த சுடலைமணி மகன் சுரேஷ் என்ற பன்றி சுரேஷ் (48), முருகேசன் மகன் ரஞ்சித் குமார் என்ற சீனிவாசன் (25) ஆகிய 2பேரும் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2பேரையும் கைது செய்து, சுரேஷுக்கு சொந்தமான பிக்கப் வேன் மற்றும் 40 வைக்கோல் கட்டுகளை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory