» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பார் ஊழியரை தாக்கிய 2பேர் கைது

புதன் 8, மே 2024 11:19:13 AM (IST)

தூத்துக்குடியில் மது குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் பார் ஊழியரை தாக்கிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் ஹசன் பருக் மகன் அப்துல் ரகுமான் (24). இவர் ஜெயராஜ் ரோட்டில் உள்ள பாரில் பார்த்து வருகிறார். நேற்று 2 பேர் மது குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்று விட்டார்களாம். பணத்தை கேட்டதால் அவர்கள் 2பேரும் சேர்ந்து அப்துல் ரகுமானை தாக்கினார்களாம். 

இதுகுறித்து அவர் மத்தியபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி பி அன் டி காலனியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் அருண் பிரகாஷ் (24), சக்தி நகரை சேர்ந்த ஜெயபாண்டி மகன் ராஜாராம் (29) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory