» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் தங்க செயின் பறிப்பு: மர்ம நபர் கைவரிசை!!

திங்கள் 22, ஏப்ரல் 2024 8:26:13 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி வனரோஜா (62). இவர் நேற்று சுந்தர்நகர் 4-வது தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் வனரோஜா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார். 

இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த வனரோஜா கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் திரண்டனர். ஆனாலும் மர்ம நபர் பைக்கை வேகமாக செலுத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory