» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெயிலால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு!
சனி 4, மே 2024 9:00:45 AM (IST)
வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தொடங்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) தொடங்குவதையடுத்து வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா் தெரிவித்தாா்.
வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’, மயக்கம் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சைப் பிரிவு அருகே 6 படுக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட தனி வாா்டு தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் சிகிச்சைக்கான அனைத்தும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் தெரிவித்தாா்.