» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சனி 4, மே 2024 8:57:44 AM (IST)

ஆறுமுகனேரியில் வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு ரூ. 30.51 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி சீனந்தோப்பைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நாராயண செல்வன் (29). சென்ட்ரிங் தொழில் செய்துவந்தாா். இவா், 15.10.2020இல் காயல்பட்டினம்-ஆறுமுகனேரி சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த லாரி மோதியதாம். இதில், பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, அவரது மனைவி லட்சுமி சுதா, மகள் மகிஷா, தந்தை மாரியப்பன், தாய் நாகஜோதி மற்றும் சகோதரிகள் ரூ.75 லட்சம் இழப்பீடு கோரி, திருநெல்வேலி 4ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தூத்துக்குடி வழக்குரைஞா் வி.ரவீந்திரன் மூலம் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கை நீதிபதி திருமகள் விசாரித்து, நாராயண செல்வன் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.30 லட்சத்து 51 ஆயிரத்து 760, ஏழரை சதவீத வட்டி மற்றும் செலவுத் தொகையை வழங்குமாறு, விபத்துக்குள்ளான லாரியின் காப்பீட்டுக் கழகத்துக்கு உத்தரவிட்டாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory