» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி வீதியுலா

திங்கள் 15, ஏப்ரல் 2024 8:06:49 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடைபெற்றது. 

தூத்துக்குடியில் உள்ள, ‘சிவன் கோயில்’ என அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. திருவிழா நாள்களில் காலையும் இரவும் சுவாமி -அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளில் சுவாமி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா மற்றும் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஆறுமுகப்பெருமான் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory