» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காரில் சோதனை நடத்திய போலீசாரிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!
சனி 13, ஏப்ரல் 2024 8:54:07 AM (IST)
தனது காரில் சோதனை நடத்திய பறக்கும் படை போலீசாரிடம் , அதிமுக வேட்பாளா் ஆா். சிவசாமி வேலுமணி வாக்கு சேகரித்தாா்.
தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர்ஆா். சிவசாமி வேலுமணி, சாத்தான்குளம் பகுதியில் வாக்கு சேகரித்து விட்டு பெரியதாழை பகுதியில் சென்றபோது அவரது காரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அவரது காரில் பணம், பொருள்கள் எதுவும் இல்லை என தெரியவந்தது. அப்போது, தோ்தல் பறக்கும்படை குழுவினரிடம் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு வேட்பாளா் ஆா்.சிவசாமி வேலுமணி கேட்டுக் கொண்டார்.