» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

வியாழன் 11, ஏப்ரல் 2024 8:10:07 PM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றாத நிர்வாகத்தை கண்டித்தும், புதிய சட்டங்களை தொழிலாளர்கள் மீது திணித்தும் அடிமைப்படுத்தும் நிர்வாகத்தை கண்டித்தும் தூத்துக்குடியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்கியதை உறுதி செய்ய வேண்டும், EPF, ESI, பிடித்தம் போக சம்பள லிஸ்ட் வழங்க வேண்டும், வார விடுமுறை உடன் சம்பளம் வழங்க வேண்டும், விபத்துக்கள் ஏதும் ஏற்பட்டால் நிர்வாகமே பொறுப்பு ஏற்க வேண்டும், ஒரு தொழிலாளியை பல வேலைக்கு அழைத்துச் செல்லக்கூடாது, ஊதியத்தை நிர்வாகமே வங்கி மூலம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory