» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குசேகரிப்பு
வியாழன் 11, ஏப்ரல் 2024 4:25:34 PM (IST)
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம், மாநகராட்சி பூங்கா, பிரையன்ட் நகர், சண்முகபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமும் வியாபாரிகளிடமும் உதயசூரியன் சின்னத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குகள் சேகரித்தார்.
திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, வட்ட செயலாளர் சரவணன், மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி, முன்னாள் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான இசக்கிமுத்து, முன்னாள் வட்ட செயலாளர் பார்த்த சாரதி, முன்னாள் வட்ட கழக செயலாளரும் வட்ட பிரதிநிதியுமான மாரியப்பன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, வட்ட கழக பிரதிநிதிகள் டி.கே.எஸ்.துரை, கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.