» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உதயநிதி ஸ்டாலின் 12ம் தேதி தூத்துக்குடி வருகை : வரலாறு காணாத வரவேற்பு அளிக்க திமுக முடிவு!

வியாழன் 11, ஏப்ரல் 2024 12:09:15 PM (IST)



தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிற 12ம் தேதி வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக கிழக்கு ஒன்றிய குழு முடிவு செய்துள்ளது. 

நாளை 12ம் தேதி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரலாறு காணாத சிறப்பு வரவேற்பு அளிப்பது தொடர்பான கிழக்கு ஒன்றிய இந்தியா கூட்டணி தலைமை தேர்தல் காரியாலய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை தாங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது: தூத்துக்குடிக்கு 12 ம் தேதி வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரலாறு காணாத சிறப்பு வரவேற்பு கொடுக்க வேண்டும் தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் உள்ள டேவிஸ் புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். அந்த இடத்திற்கு லட்சக்கணக்கான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் வருகை தந்து வரலாறு காணாத வரவேற்பு கொடுக்க வேண்டும். 

மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள 41 வாக்குச்சாவடிகளுக்கும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளன ஒரு பூத்துக்கு ஒன்பது பூத்கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் சுமார் 900 வாக்காளர்கள் கொண்ட ஒரு பூத் பகுதியிலுள்ள வாக்காளர்களை சந்தித்து அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் மாப்பிள்ளையூரணி பகுதியில் மட்டும் சுமார் 30,000 வாக்குகளுக்கு மேல் கனிமொழி கருணாநிதி அவர்களின் வெற்றிக்கு எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சிக்கு திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவருமான சரவணக்குமார், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, அரசு வழக்கறிஞர் பூங்குமார், தேர்தல் பொறுப்பாளர் சுதா ஆனந்தன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன் பாண்டி, மகளிர் தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஒன்றிய கவுன்சிலர் சேவியர், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பால்துரை, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொறுப்பாளர் சிலுவைப்பட்டி பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory