» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து 94வது நினைவு நாள் : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
வெள்ளி 29, மார்ச் 2024 5:11:16 PM (IST)
தூத்துக்குடி குருஸ் பர்னாந்து சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி முன்னாள் நகர்மன்ற தலைவரும் தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த கோமான் ராவ்பகதூர் குருஸ் பர்னாந்து 94வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமாகிய பெ.கீதாஜீவன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் சேசையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.