» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண் தற்கொலை: போலீஸ் விசாரணை
வியாழன் 30, நவம்பர் 2023 11:53:05 AM (IST)
உடன்குடியில் கல்லூரி பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் செல்வபாரதி (25). இவர் ஒரு தனியார் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல கல்லூரிக்கு சென்ற அவர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தாய் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் செல்வபாரதி பிணமாக தொங்கினார். இது தொடர்பாக தகவலின் பேரில் குலசேகரன் பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வபாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வபாரதி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










