» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிரிக்கெட் போட்டி: நாசரேத் அணி வெற்றி!

புதன் 29, நவம்பர் 2023 5:05:17 PM (IST)



நாசரேத் அருகே   ஞானராஜ் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நாசரேத் அணி வெற்றி பெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சி ஞானராஜ் நகரில் கிரிக்கெட் போட்டி 4  நாட்கள் நடந்தது. மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் நாசரேத் ஸ்பீட் வேஸ் அணியும், ஞானராஜ் நகர் நியுஸ் கிளப் அணியும் மோதின. இதில் நாசரேத் ஸ்பீட்வேஸ்  அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச்சென்றது. 

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார்  தலைமை வகித்து வெற்றிபெற்ற நாசரேத் ஸ்பீட் வேஸ் அணிக்கு கோப்பை பரிசு மற்றும் ரொக்கப்பணத்தையும், 2 வது இடத்தை பிடித்த ஞானராஜ் நகர் நியுஸ் கிளப் அணிக்கு மாவட்ட திமுக பிரதிநிதி கலை அரசு கோப்பை பரிசு மற்றும் ரொக்கப் பணத்தையும் வழங்கினர். ஏற்பாடுகளை ஞானராஜ்நகர் நியுஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory