» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிரிக்கெட் போட்டி: நாசரேத் அணி வெற்றி!
புதன் 29, நவம்பர் 2023 5:05:17 PM (IST)

நாசரேத் அருகே ஞானராஜ் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நாசரேத் அணி வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி ஊராட்சி ஞானராஜ் நகரில் கிரிக்கெட் போட்டி 4 நாட்கள் நடந்தது. மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் நாசரேத் ஸ்பீட் வேஸ் அணியும், ஞானராஜ் நகர் நியுஸ் கிளப் அணியும் மோதின. இதில் நாசரேத் ஸ்பீட்வேஸ் அணி வெற்றி பெற்று கோப்பை பரிசை தட்டிச்சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார் தலைமை வகித்து வெற்றிபெற்ற நாசரேத் ஸ்பீட் வேஸ் அணிக்கு கோப்பை பரிசு மற்றும் ரொக்கப்பணத்தையும், 2 வது இடத்தை பிடித்த ஞானராஜ் நகர் நியுஸ் கிளப் அணிக்கு மாவட்ட திமுக பிரதிநிதி கலை அரசு கோப்பை பரிசு மற்றும் ரொக்கப் பணத்தையும் வழங்கினர். ஏற்பாடுகளை ஞானராஜ்நகர் நியுஸ் கிளப் அணியினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










