» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓன் ஸ்டாப் சென்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
புதன் 29, நவம்பர் 2023 11:52:01 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓன் ஸ்டாப் சென்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில். "ஒன் ஸ்டாப் சென்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுபாட்டின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் கூடுதலாக கோவில்பட்டியில் ஒன் ஸ்டாப் சென்டர் ஒருங்கிணைந்த சேவை மையம் (Additional One Stop Centre) செயல்படவுள்ளது.
அதில் சுழற்சி முறையில் பணிபுரிய பல்வேறு பணியிடஙகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி:ஒரு மையநிர்வாகி - சமூகநல பணியில் முதுநிலைப் பட்டம் (MSW),
ஒரு மூத்த ஆலோசகர் - சமூகநல பணியில் முதுநிலைப் பட்டம் (MSW) அல்லது உளவியல், சமூகவியலில் முதுநிலைப் பட்டம்.
ஆறு வழக்குப் பணியாளர்கள் - சமூகப்பணி அல்லது உளவியல் அல்லது சமூகவியலில் இளநிலைப் பட்டம்
ஒரு தகவல் தொழில்நுட்ப பணியாளர் - கணினி அறிவியலில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டம்.
இரண்டு பாதுகாவலர்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி
இரண்டு பல்நோக்கு உதவியாளர்கள் - 8ம் வகுப்பு தேர்ச்சி
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 15.12.2023 மாலை 5 மணிக்குள் கீழ்காணும் மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரபள்ளம், தூத்துக்குடி - 628101, தொலைபேசி எண்: 04612325606 தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










