» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இருவா் கைது

செவ்வாய் 28, நவம்பர் 2023 7:58:43 AM (IST)

கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 9ஆவது தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி முருகம்மாள் (40). கோவில்பட்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ளாா். இவரது வீட்டருகே குடியிருக்கும் பூல்பாண்டி மகன் முத்துப்பாண்டியின் மாடு முருகம்மாள் வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்ததாம். 

இதையடுத்து, மாட்டை கட்டிப்போடும்படி முத்துப்பாண்டியின் தாயிடம், முருகம்மாள் கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, முருகம்மாள் வீட்டைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் முத்துப்பாண்டி (32), அவரது தாயாா் பொற்கொடி (58) ஆகியோா் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory