» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் : ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

திங்கள் 27, நவம்பர் 2023 8:19:45 AM (IST)



தூத்துக்குடியிலுள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமை ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் 2024 நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. 

நேற்று மீண்டும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு மனுக்கள் பெறப்பட்டன. இந்த பணிகளை ஆட்சியர் லட்சுமிபதி நேற்று ஆய்வு செய்தார். அவர் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்த முகாமை நேரில் பார்வையிட்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory