» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி போலீஸ்காரர் ஆற்றில் மூழ்கி பலி!

ஞாயிறு 26, நவம்பர் 2023 8:51:44 AM (IST)

ஆற்றில்  குளிக்க சென்றபோது ஆற்றில் தவறி விழுந்த தூத்துக்குடி போலீஸ்காரர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பசுவந்தனை பகுதியை சேர்ந்த செந்தூர்பாண்டி என்பவரது மகன் கோவிந்தராஜ் (25). போலீஸ்காரரான இவர், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சோலாடி போலீஸ் சோதனைச்சாவடியில் பணிபுரிந்து வந்தார். அவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கோவை பட்டாலியன் படையில் இருந்தார்.

நேற்று காலை கோவிந்தராஜ் சோதனைச்சாவடி அருகே உள்ள சோலாடி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு துணி துவைத்து கொண்டிருந்த போது, அவர் தவறி ஆற்றுக்குள் விழுந்து உள்ளார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசாரிடம் கூறினர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது, கோவிந்தராஜ் நீரில் மூழ்கியது தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கோவிந்தராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் சேரம்பாடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி போலீஸ்காரர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory