» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காந்திய விருது வழங்கும் விழா
செவ்வாய் 3, அக்டோபர் 2023 7:54:46 AM (IST)

தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது.
தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நலம் மன்றம், காந்திய வழியில் ஊருக்கு பத்து பேர் இயக்கம், சேவா கல்வி அறக்கட்டளை இணைந்து காந்தி ஜெயந்தி விழாவை நடத்தியது. ஆசிரியை மாரியம்மாள் அவர்கள் வரவேற்று பேசினார். விழாவிற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் தலைவர் மைதிலி அவர்கள் தலைமை தாங்கினார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் செயலாளர் காமாட்சி முன்னிலை வகித்தார்.
காந்திய வழியில் ஊருக்கு பத்து பேர் இயக்க மாவட்ட தலைவர் சு. முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி வரும் ஜே இ டேவிட் சாலமன் அலெக்சாண்டர் அவர்களின் நேர்மையைப் பாராட்டி அவர்களுக்கு காந்திய விருது வழங்கப்பட்டது. தொழிலதிபர் செல்வராஜ், வழக்குரைஞர் விஜய சுந்தர் மற்றும் கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் அவர்களுக்கும் அவர்களுடைய சேவையை பாராட்டி காந்திய விருது வழங்கப்பட்டது. புனித அலாய்சியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
காந்தி குறித்து பேசிய குழந்தைகளுக்கு பத்மலதா பரிசு வழங்கினார். காந்தி குறித்து கவிதை எழுதி வாசித்தவர்களுக்கு சர்வேயர் குருசாமி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியை தேவி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம், காந்திய வழியில் ஊருக்கு 10 பேர் இயக்கம், சேவா கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சிறப்பாக செய்திருந்தது. விழாவில் குடியிருப்பு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










