» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்வு

புதன் 12, ஜூலை 2023 3:58:58 PM (IST)



தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்து கோவில்களுக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பின் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தூத்துக்குடியில் பிரசித்திப்பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கு பொறுப்பு அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணையை சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.  அதன்படி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர்களாக செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி, மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் அறங்காலர்களாக கீதா செல்வ மாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா, ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் வைத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா தலைமையில் செயல் அலுவலர் குலசை ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் ருக்மணி ஆகியோர் அடங்கிய குழுக்கள் மூலம் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கோவில் அறங்காலர்களாக உள்ள செல்வசித்ரா அறிவழகன், மகாராஜன், பாலகுருசாமி வாக்களித்தனர். அதில் அறங்காவல்குழு தலைவராக செல்வசித்ரா அறிவழகன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். 



அதேபோல், மேலூர் பத்திரகாளியம்மன் கோவிலில் வைத்து நடைபெற்ற தேர்வில் அறங்காலர்களாக உள்ள கீதா செல்வ மாரியப்பன், மகேஸ்வரன், மஞ்சுளா ஆகியோர் வாக்களித்தனர். அதில் அறங்காவல்குழு தலைவராக கீதா செல்வமாரியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். இரு ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று, பிரசாதங்கள் வழங்கப்பட்டனர். பின்னர் பொறுப்பேற்றுக் கொண்ட அனைவருக்கும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோட்டுராஜா, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் கந்தசாமி மற்றும் கோபால் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory