» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தாளாளர் கைது!

வெள்ளி 9, ஜூன் 2023 8:17:46 PM (IST)

தென்காசியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரியின் தாளாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

தென்காசி  ஆசாத் நகர் பகுதியில் உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் தாளாளராக முகமது அன்சாரி உள்ளார். இவர் நேற்று அந்த கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் பயிலும் 17 வயதான 2-ம் ஆண்டு மாணவியை தனது அறைக்கு வரவழைத்து ஆபாசமாக பேசி, தவறாக நடக்க முயன்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டவாறு அந்த அறையில் இருந்து வெளியேறி, தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில், குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கல்லூரி தாளாளர் முகமது அன்சாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory