» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லோடு ஆட்டோ மோதல்: வாலிபர் பரிதாப சாவு
செவ்வாய் 28, ஜூன் 2022 5:37:47 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே பைக் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் பைக் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள நடுவக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி மகன் ராமர் (25). இவர் ஆறாம்பண்ணை பகுதியில் பைக் சர்வீஸ் மற்றும் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இன்று மதியம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே பைக் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்ற லோடு ஆட்டோ டிரைவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விபத்தில் பலியான ராமருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவர்கள் குடும்பத்தினர் பெண்பார்த்துவந்தபோது அவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.