» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுட்டெரிக்கும் வெயிலில் நடு பஜாரில் நிற்கும் பேரூந்து : பயணிகள் அவதி!!
வியாழன் 25, ஏப்ரல் 2024 8:49:29 PM (IST)
சாத்தான்குளத்தில் தற்காலிக பேருந்து நிலையத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் நின்று பேருந்தில் ஏற வேண்டிய அவல நிலை நிலவுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள கேடி கோசல்ராம் பழைய பஸ் நிலையம் பழுதுபட்டுள்ளதால் தற்பொழுது சுமார் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மந்தமாக நடந்து வருகின்றன. தற்காலிகமாக அனைத்து போக்குவரத்து பேருந்துக்களும் சாலையில் கொளுத்தும் வெயிலில் நடு பஜாரில் நின்று ஏற்றி செல்கின்றனர். இதேபோல் பயணிகளும் பொதுமக்கள் மேல் கூரை செட் இல்லாமலும் உட்கார இடம் இல்லாமலும் கொளுத்தும் வெயிலில் நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர்.
சாத்தான்குளத்தில் கடந்த ஒரு வார காலமாக சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் வெப்ப காற்று வீசி வருகிறது .மாலை 3 மணிக்கு மேல் மெயின் பஜாரில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இரவு நேரங்களில் வீடுகளில் மின்தடை ஏற்பட்டுவதால் மின்விசிறிகள் இயங்க முடியாமல் பொதுமக்களும் குறிப்பாக குழந்தைகளும் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
புதிய பஸ் நிலைய பணிகள் தாமதம் ஆவதால் வெளியூர் பயணிகள் பொதுமக்கள் பேரூந்துக்காக நடு பஜாரில் காத்து நிற்கும் அவலநிலை மாறிட தற்காலிகமாக மேல் கூறை அமைத்து உட்கார இடவசதி அமைத்திட பேரூராட்சி நிர்வாகத்தினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.