» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை : 9பேர் கைது!
திங்கள் 18, அக்டோபர் 2021 4:23:06 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். 176 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி வடபாகம், முறப்பநாடு, கயத்தார், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 176 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.