» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை : 9பேர் கைது!

திங்கள் 18, அக்டோபர் 2021 4:23:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். 176 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி வடபாகம், முறப்பநாடு, கயத்தார், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 5 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர  ரோந்து பணி மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 9 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 176 மதுபாட்டில்கள்  பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory