» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் : இஸ்ரேல் அறிவிப்பு
புதன் 22, நவம்பர் 2023 12:36:39 PM (IST)
காசாவில் இன்று முதல் (நவ.,22) 4 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், கடந்த அக்., 7ம் தேதி முதல் மோதல் நடக்கிறது. இதில், இஸ்ரேலில் 1,400 பேரும், காசாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட, 11,500க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தரைவழித் தாக்குதலை நடத்தி வந்தது.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டமைத்துள்ள சுரங்கப்பாதை வலையமைப்பை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வந்தன. காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில், இஸ்ரேல் படைகள் தொடர் சோதனையில் ஈடுபட்டன. இப்போரில் ஆயிரக் கணக்கான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். காசா மாக்கள் உணவு தண்ணீர் இன்றி அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (நவ.,22) இஸ்ரேல், காசாவில் ஹமாஸ் பயங்கரவாததிற்கு எதிரான போரை 4 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.