» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

என்னை நீண்ட நாட்கள் சிறையில் வைத்து இருக்க முடியாது: டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் கடிதம்

சனி 23, மார்ச் 2024 5:39:14 PM (IST)

என்னை நீண்ட நாட்கள் சிறையில் வைத்து இருக்க முடியாது. விரைவில் வெளியே வருவேன்'' என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர், டெல்லி மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். 

அக்கடிதத்தை கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா நிருபர்களிடம் வாசித்துக்காட்டினார். அக்கடிதத்தில் கெஜ்ரிவால் கூறியதாவது: சமுதாயத்திற்காக தொடர்ந்து உழையுங்கள். பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் உட்பட யாரையும் வெறுக்க வேண்டாம். அவர்களும் நமது சகோதரர்களே. நாட்டை பலவீனப்படுத்தும் சக்திகள் இந்தியாவிற்குள்ளும், வெளியேயும் உள்ளன.

நீண்ட காலம் என்னை சிறையில் வைத்து இருக்க முடியாது. விரைவில் வெளியே வந்து, எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory