» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மாற்றத்தை விளைவிக்கிற கட்சிக்கு வாக்களித்தேன் : நடிகர் பிரகாஷ்ராஜ்

வெள்ளி 26, ஏப்ரல் 2024 10:21:08 AM (IST)

கடந்த 10 ஆண்டுகளில் வெறுப்பு மற்றும் பிளவுவாத அரசியலைக் கண்ட நமக்கு, மாற்றத்தை விளைவிக்கிற கட்சியின் வேட்பாளருக்கு என் வாக்கைப் பதிவு செய்துள்ளேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

கா்நாடகத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 26) வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்தலில் 247 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்; 2.88 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.கா்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.

முதல்கட்டத் தோ்தலில் உடுப்பி, ஹாசன், தென்கன்னடம், சித்ரதுா்கா, தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ் நகா், பெங்களூரு ஊரகம், பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு தெற்கு, சிக்பளாப்பூா், கோலாா் ஆகிய 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (ஏப். 26) காலை பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

வாக்களித்தப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ஒருவர் நம்பும் வேட்பாளரை தேர்வு செய்வது மிக முக்கியம். "நாடாளுமன்றத்தில் எனது குரலாக யார் குரல் கொடுப்பார்கள் என்று எனது வாக்கானது என்னுடைய உரிமையை நிலை நாட்டுகிறது.நீங்கள் நம்பும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம், கடந்த 10 ஆண்டுகளில் நான் கண்ட வெறுப்பு மற்றும் பிளவுபடுத்தும் அரசியல் மாற்றத்திற்காக நான் நம்பும் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளேன்." என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory