» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் : பிரதமர் மோடி

புதன் 24, ஜனவரி 2024 5:25:39 PM (IST)

பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலை தளத்தில், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், பெண் குழந்தையின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் திறமைகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் நம் நாட்டையும் சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றுவார்கள். ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வி கற்க, பா.ஜ., பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெண் குழந்தைகள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory