» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அரசைக் கண்டித்து 29-ந்தேதி போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 3:16:01 PM (IST)
மத்திய அரசின் சர்வாதிகார போக்கை எதிர்த்து வருகிற 29-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "100 நாட்கள் வேலைக்கான உரிய தொகையை தராமல் மத்திய அரசு நிறுத்தி விட்டது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூட எங்களுடைய மாநிலத்திற்கு என்று எதுவும் அளிக்கப்படவில்லை. அதனால், மேற்கு வங்க மக்களுக்கு எதிரான மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து வருகிற 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் அம்பேத்கார் சிலை முன் போராட்டம் நடத்தப்படும் என்றார்.