» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூர் வட்டம் என். சுப்பையாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முனியப்பன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இராஜசேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் "நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது வீடா? நாடா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்ஜான் கணேஷ் பணியாற்றினார்.
வீடே என்ற அணியில், விநாயக சுந்தரி, முருகேசன் ஆகியோரும், நாடே என்ற அணியில் கிருஷ்ணன், செல்வம் ஆகி போரும் வாதிட்டனர். முடிவில், நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது நாடே என்ற முடிவினை நடுவர் அறிவித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார், சகாராவைத் தாண்டாத ஒட்டகம் கல்வி நிறுவனர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)

கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
புதன் 15, அக்டோபர் 2025 5:15:51 PM (IST)


