» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

கோவில்பட்டி அருகே உள்ள சாத்தூர் வட்டம் என். சுப்பையாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முனியப்பன் தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இராஜசேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் "நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது வீடா? நாடா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்ஜான் கணேஷ் பணியாற்றினார்.
வீடே என்ற அணியில், விநாயக சுந்தரி, முருகேசன் ஆகியோரும், நாடே என்ற அணியில் கிருஷ்ணன், செல்வம் ஆகி போரும் வாதிட்டனர். முடிவில், நல்ல பிள்ளைகளைப் பெரிதும் உருவாக்குவது நாடே என்ற முடிவினை நடுவர் அறிவித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் வேளாண் ஆசிரியர் சுரேஷ்குமார், சகாராவைத் தாண்டாத ஒட்டகம் கல்வி நிறுவனர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியை காந்திமதி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

