» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கான மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டப் பள்ளியில் இருந்து புறப்பட்டு பிரகாசபுரம், மூக்குப்பீறி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
இதில் நாசரேத் காவல் நிலைய தலைமை காவலர்கள் வேல்பாண்டியன், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர், தலைமை ஆசிரியர் கென்னடி, உடற்கல்வி ஆசிரியர்கள் பிரைட்டன் ஜோயல், ஜாஸ்மின் ஏஞ்சல் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

