» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

செய்துங்கநல்லூர்அருகில் உள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர பயிற்சி வகுப்பு பயிலரங்கம் நடந்தது.
திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெய்தூண் பீவி முன்னிலை வகித்தார். கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். பயிற்சியாளராக அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் துரைப்பாண்டியன், எழுத்தாளர்கள் காயல் அருள், தூத்துக்குடி மாரிமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சதீரா சுல்தானா, இபுராஹீம், பம்மியா, ஆசியா, பூர்ண சிவானி, அக்ஷயா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் காளிமுத்து, ஆசிரியைகள் அருள்செல்வி, டெம்பி அருள்டா உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை அங்கயர் கன்னி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)

கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
புதன் 15, அக்டோபர் 2025 5:15:51 PM (IST)


