» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா

செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் தேசிய நூலக வார விழா நடந்தது.

நாடு முழுவதும் பொதுமக்களிடம் குறைந்த செலவில் நிறைந்த படிப்பினை தரும் பொது நூலகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய நூலக வார விழா நவம்பர்14முதல் 21ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. எட்டையாபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளியில் நடந்த தேசிய நூலக வாரவிழாவிற்கு தலைமையாசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமை வகித்தார்.

இதில் நூலக ஆர்வலர் ஆறுமுகசாமி கலந்துகொண்டு 25 மாணவர்களுக்கான நூலக உறுப்பினர் தொகையை செலுத்தினார். இதில் 25 மாணவர்கள் எட்டயபுரம் அரசு பொது நூலகத்தில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர். அரசு கிளை நூலகர் முத்து இருளப்பன் கலந்துகொண்டு நூலக விதிகள் மற்றும் வசதிகள் குறித்து பேசினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory