» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பண்டாரம்பட்டி தொடக்கப்பள்ளியில் புதிய பயணத்தின் புன்னகை நாள் விழா
திங்கள் 6, அக்டோபர் 2025 12:24:33 PM (IST)

தூத்துக்குடி, பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் 2025-2026 கல்வி ஆண்டின் இரண்டாம் பருவ தொடக்க நிகழ்ச்சியாக புதிய பயணத்தின் புன்னகை நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருள்திரு ஜெபஸ்டின் தங்கபாண்டி தலைமை தாங்கினார். ரீத்தம்மாள்புரம் பங்கின் அருள்தந்தை அத்தனாசியூஸ் ஜோ மற்றும் லயன் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இரண்டாம் பருவ தொடக்க நாளில் புன்னகை பூத்த முத்துடன் பள்ளிக்கு வருகை தந்த அனைத்து மாணவ மாணவியருக்கும் பள்ளியின் தாளாளர் அருள்திரு ஜெபஸ்டின் தங்கபாண்டி மாணவர்களை வாழ்த்தி ஆசி வழங்கினார்.
மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், மலர் கொடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அருள்தந்தை அத்தனாசியூஸ் ஜோ தேசியக் கொடி ஏற்றுவித்து சிறப்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் ஆசி கூற விழா இனிதே நிறைவுற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். பெற்றோர் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

