» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினம்: சாரண, சாரணிய இயக்கத்தினர் பங்கேற்பு
சனி 20, செப்டம்பர் 2025 3:08:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் ன் கடற்கரைப் பகுதிகளில் தூய்மைப் பணி நடைப்பெற்றது.
சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை செயல்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் நோக்கத்துடன் பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் தூய்மைப் பணி இன்று நடைப்பெற்றது.
கடற்கரை தூய்மைப் பணியினை சாரண, சாரணிய இயக்கச் செயலாளர் செ.எட்வர்ட் ஜாண்சன் பால், மாநில உதவி ஆணையரும், மாவட்டப் பயிற்சி ஆணையருமான ஆ.ஜெயாசண்முகம், மாவட்ட சாரண ஆணையர் பி.சரவணன், விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளியின் முதல்வர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தனர். மாநகராட்சி ஆணையர்பிரியங்கா சாரண, சாரணியர்களின் தூய்மைப் பணியினை பார்வையிட்டார்.
நிறைவாக மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு கடற்கரை ஓரம் மரங்களை நட்டு வைத்து சாரண, சாரணியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிற்கு அருகிலும் மரங்களை நட்டு வைத்து பாதுகாப்பதன் மூலம் இயற்கையை நல்ல பாதுகாக்க முடியும் என்று கூறினார்.கடற்கரை தூய்மைப் பணியில் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளி, புனித லசால் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து சாரண, சாரணியர்கள் மற்றும் பொறுப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

