» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழக அரசின் விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு
திங்கள் 8, செப்டம்பர் 2025 3:36:39 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளார்.
இந்த விருதை ஆசிரியர் தினத்தன்று சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினார். ஆசியை வனிதாவுக்கு கருங்குளம் புனித வளன் துவக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து பாராட்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜாக்சன் தலைமை வகித்தார் வாழ்த்தினார்.
ஆசிரியை ஜெயமேரி வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியை வனிதா தனக்கு அரசு வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை பள்ளி வளர்ச்சிக்காக தாளார் ஜாக்சன் அவர்களிடம் ஒப்படைத்தார். பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியை பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


