» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:52:20 PM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ராகிங் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களுக்கு ஆக.12 முதல் 18வரை வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இக்கல்லூரியின் முதல்வர் (பொ) சா. ஆதித்தன் தொடக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் பட்டப்படிப்பு மாணவர்கள் பாங்கேற்றனர். 

கல்லூரி மாணவர்களிடையே குறும்படப் போட்டி நடத்தப்பட்டது. "ராகிங் வேண்டாம்” என்ற தலைப்பில் மாணவர் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கல்லூரி மாணவர்களிடையே முழுக்க எழுத்துப் போட்டி நடத்தப்பட்டு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பா. சிவசங்கர் மற்றும் இரா.ஷாலினி ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.   


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory