» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் பகுதிகளில் சுதந்திர தின விழா

சனி 16, ஆகஸ்ட் 2025 10:35:42 AM (IST)



நாசரேத் பகுதிகளில் 79வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார்.பள்ளி தலைவர் எலிசபெத் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் செந்தில் குமார் தேசிய கொடியேற்றினார். மாணவிகள் மெலோசா, ஜெனிபர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி வைஷ்ணவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் மாரிதங்கம் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். துணை தலைவர் அருண் சாமுவேல், செயல் அலுவலர் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், துப்புரவு ஆய்வாளர் முத்துவேல், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் சுதந்திர தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் சோபியா ஞானமேரி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory