» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க சிறப்பு நிகழ்ச்சி
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 1:08:37 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர் ஜென்னிங்ஸ் காமராஜ் வரவேற்றார். தாளாளர் வழக்கறிஞர் பிரபாகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், செஞ்சிலுவை சங்கத்தின் குறிக்கோள்கள் அனைத்தையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும், நாள்தோறும் உடல் நலம் பேணுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சிறப்பம்சங்களான சுகாதாரம், சேவை, நட்புறவு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.செஞ்சிலுவை சங்கத்தினை நிறுவிய ஹென்றி டுனான்ட் வரலாறு குறித்து மாணவர்கள் தெரிந்து கொண்டனர்.
செஞ்சிறுவை சங்கத்தின் முதன்மையான நோக்கமான மனிதாபிமான சேவைகளை அனைவருக்கும் வழங்குவது குறித்து மாணவர்களுக்கு கூறப்பட்டது. செஞ்சிலுவை சங்க பாடல் மாணவர்களுக்கு பாடி காண்பிக்கப்பட்டது. இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


