» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வு: புனித அன்னாள் பள்ளி மாணவர்கள் சாதனை!

வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:16:44 AM (IST)



தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்.எம்.எம்.எஸ். தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான என்.எம்.எம்.எஸ். தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில் கீழராமசாமியாபுரம், புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி மாணவி அ. பெல்சிட்டா கரோலின் தேசிய திறனாய்வுத் தேர்விலும், இ.ஜோயல் எண்ற மாணவன், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஊரகத் திறனாய்வுத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  சாதனை படைத்த  மாணவர்களைப் பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜோசப் ஸ்டாலின், தலைமையாசிரியர் ஸ்டாலின் மற்றும்  ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory