» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
வியாழன் 5, டிசம்பர் 2024 8:12:50 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால நோய் தடுப்பு மருந்துகளில் ஒன்றான நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
தலைமையாசிரியர் குணசீலராஜ் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பள்ளி சிறார் குழு மருத்துவர் பத்ரி ஸ்ரீநிவாஸ் மற்றும் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ் சமுதாய நல அலுவலர் மருத்துவர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சங்கரேஸ்வரி, உடையார்குளம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் ரேவதி, அபிலா, பல்நோக்கு பணியாளர் முத்துலட்சுமி, பெண் சுகாதார தன்னார்வலர்கள் ராஜேஸ்வரி மற்றும் முத்துலஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதாகர் தலைமையில், உடற்கல்வி ஆசிரியர் தனபால், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர் பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்சியருக்கு பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பிய பள்ளி மாணவ, மாணவிகள்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:32:56 PM (IST)

சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சர்வ சமய வழிபாடு
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:54:04 AM (IST)

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)


