» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
சனி 31, ஆகஸ்ட் 2024 10:32:01 AM (IST)

தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜேசிஸ் அமைப்பைச் சார்ந்த ராஜேஷ் மற்றும் ராஜசேகர் ஆகியோர் போதைப்பொருட்களின் பழக்கம் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். போதைப்பொருட்கள் பழக்கம் மூளை, கல்லீரல், இதயம் போன்ற உடலுறுப்புகளை பாதித்து நரம்புத் தளர்ச்சி, புற்று நோய் ஆகிய விளைவுகளை உண்டாக்கும். எனவே மாணவர்கள் போதைப் பொருட்களை தாங்கள் பயன்படுத்தாமல் இருப்பதோடு மட்டுமன்றி நண்பர்களும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதையும் தடுப்போம் எனவும் போதையில்லா தமிழகம் உருவாக பாடுபடுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை அமல்ராஜ் இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் செல்வன் சில்வா வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் பெனிட்டன் நன்றியுரை ஆற்றினார். ஆசிரியர் ஜான் போஸ்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மதுரை மறைமாநில சேசு சபையின் முன்னுரிமைத் திட்டங்களின் செயற்பாட்டுக் குழு இந்நிகழ்ச்சிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)



naan thanNov 25, 2024 - 12:01:32 PM | Posted IP 172.7*****