» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செய்துங்கநல்லூர் பள்ளியில் ஹிரோஷிமா தினம்
புதன் 7, ஆகஸ்ட் 2024 12:50:05 PM (IST)

செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது.
ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தலைமை ஆசிரியர் அருட்சகோ. ஜெபமாலை பேசினார்.
"உலகினை அழிக்கும் யுத்தமே வேண்டாம் வேண்டும் சமாதானம் என குழந்தைகள் பாடலை பாடினர். அறிவியல் தூதன் முத்துசாமி வன்னியப்பன் ஹிரோஷிமா நினைவு தின சடகோ கொக்கு செய்து காட்டினார். பின் அறிவியல் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் மூலம் தொலைவில் உள்ள காட்சிகள் காண்பிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியர் மைக்கேல் அருளானந்தம் நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


